search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெருப்புக் குழம்பு"

    நெருப்புக் குழம்பை கக்கும் எரிமலையில் ஏறி ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை காணிக்கை செலுத்தும் விநோத விழாவை இந்தோனேசியாவின் பழங்குடி மக்கள் கொண்டாடுகின்றனர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் எரிமலைகள் அதிகம். அதை பார்க்கவே சுற்றுலா பயணிகள் அங்கு அதிக அளவில் செல்கின்றனர். ஒரு வருடத்தில் சராசரியாக 3 கோடி பேர் அங்கு சுற்றுலா சென்று தீவுகளை சுற்றி பார்க்கிறார்கள்.

    அவற்றில் மவுண்ட் பரோமா என்ற எரிமலையில் ஜூலை மாதம் வினோதமான திருவிழா நடக்கிறது. அப்போது பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மக்கள் மவுண்ட் பரோமா எரிமலை மீது ஏறி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    எரிமலை வெடிக்கும் நிலையில் இருக்கும் போது கூட அதன் மீது ஏறி நின்று வழிபாடு நடத்துகிறார்கள்.

    இந்தோனேசியாவின் ரோரோ ஆண்டங் என்ற மன்னன் வாரிசு இல்லாமல் கஷ்டப்பட்டான். கடவுளிடம் வேண்டி வாரிசு பெற்ற அவன் இந்த எரிமலைக்கு காணிக்கை அளிப்பதாக சத்தியம் செய்தான்.


    அதில் இருந்து மக்களும் இந்த எரிமலைக்கு காணிக்கை அளித்து வருகிறார்கள். முக்கியமாக அந்த பகுதியில் உள்ள டேன்ஜர் இன பழங்குடி மக்கள் காணிக்கை செலுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

    பயிர்கள், பழங்கள், காசு என வித்தியாசமான காணிக்கைகள் வழங்கப்படுகிறது. அதே போன்று ஆடு, மாடு, கோழி போன்ற உயிருள்ள பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.
    ×